புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோய். இந்நோயை ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையேல் அது உயிருக்கே ஆபத்தாக முடியும். எந்த நோயும் வந்த பிறகு சரி செய்வதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இதற்கு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது. புற்று நோயை தடுக்க உதவும் உணவுகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

புற்றுநோயை வராமல் தடுக்க உதவும் உணவுகள்:-

ஏலக்காய் டீ குடிப்பதால் இதிலுள்ள பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கார்சினோஜெனிக் என்னும் புற்று நோய் உண்டாக்கும் பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது.
நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தி பல் தேய்த்தால் வாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.
கேரட் சப்பிடுவதால் மார்பகம், கல்லீரலில் ஏற்படும் புற்றுநோயை வராமல் தடுக்கலாம்.
சேனைக் கிழங்கு மற்றும் மக்காளச் சோளத்தை அதிக அளவில் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை வராமல் தடுக்கலாம்.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.