பெண்கள் நறுமணத்துடன் வெளியேறுதல் ”இஸ்லாம்” கூறும் எச்சரிக்கை!

பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தினரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள்.  (அறிவிப்பவர்: மூஸா(ரலி) நூல்: அஹமத்).

வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.

இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே கடமையான குளிப்பு போல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி,பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்).

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.