பதியத்தளாவை பள்ளி வாயலை அகற்ற கோரி சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் எடுக்கலாம்!

மாணிக்கமடு சிலைவைப்புக்கு எதிராக அரசாங்கத்துக்கு எதிராக நடத்திய கர்த்தாலுக்கு பதிலாக, அம்பாரை மாவட்ட எம்பிமாருக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் எதிராக நடத்தியிருந்தால் மக்கள் வெற்றியை கண்டிருக்கலாம்.

இந்த எம்பிமாருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தால், இந்த எம்பிமார்கள் ரணிலிடமோ, மைத்திரியிடமோ சென்று அழுதிருப்பார்கள்.

எங்களால் எங்கள் தொகுதிக்குள் போகமுடியவில்லை எங்களை மக்கள் துரத்தியடிக்கிறார்கள் என்று கூறினார்களேயானால் இந்த நடவடிக்கை குறிப்பாக பிரதமர் ரணில் அவர்களை பாதிக்கும் ஏனென்றால் அவரும் தேர்தல்காலங்களில் முஸ்லிம் பகுதிகளுக்கு வாக்குவேட்டையாட வந்தேயாகவேண்டும் என்பதனாலாகும்.

தங்களது எம்பிக்களையே துரத்தியடிப்பவர்கள், எம்மையும் அங்கே வர அனுமதிக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் கவணம்செலுத்த தவறமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.

ஆகவே, முஸ்லிம் மக்கள் தேவையில்லாமல் கர்த்தால் நடத்தி அரசாங்கத்தையோ, சிங்கள மக்களையோ எதிர்ப்பதில் எந்த லாபமும் அடையபோவதில்லை, மாறாக சிங்கள மக்களும் எங்கள் பகுதிகளிலும் பள்ளிவாசல் இருக்கவோ கட்டவோ கூடாது என்று கர்த்தால் நடத்தினால் என்ன விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதை சிந்தித்தார்களா?

குறிப்பாக பதியத்தலாவையில் சென்ற வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் இதுசம்பந்தமாகவே நடந்ததாக ஒரு நண்பர் கூறினார், இந்த கர்த்தால்கள் மூலம் எங்கள் பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல்களுக்கும் பிரச்சினைவரலாம் என்ற தோரணையில் அங்கே பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதாம்,
இப்படியான நடவடிக்கைகள் எம்மைத்தான் பாதிக்குமே தவிற, வேரொரு நண்மையையும் அது பெற்றுத்தற போவதில்லை.

நமக்கு நடக்கும் அநியாயங்களுக்கு தீர்வை பெற்றுத்தறக்கூடிய நமது அரசியல் வாதிகளே சோரம்போய் கிடக்கும் போது, அவர்களை தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு யாரையோ தட்டிக்கேட்க முற்படுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக தெறியவில்லை.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.