நான் இருக்கும் வரையில் விடமாட்டேன்- ஜனாதிபதி உறுதி!

தான் இந்நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வரையில், பௌத்த மத்துக்குரிய முதலிடத்தை நீக்குவதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சகோதர சிங்கள வாராந்த பத்திரிகையொன்றுக்கு ஜனாதிபதி அளித்துள்ள விசேட செய்தியில் இதனைக் கூறியுள்ளார்.
பௌத்த மதத்துக்கு இந்நாட்டிலுள்ள முதலிடம் பறிபோயுள்ளது எனும் தலைப்பில் கடந்த சகோதர சிங்கள வார சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்த பிரதான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து இவ்வார சஞ்சிகைக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள விசேட செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.  (மு)

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.