இலங்கையின் நான்கு தேர்தல்களில் தலையிட்ட அமெரிக்கா- அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் நடைபெற்ற நான்கு தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மெலன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டோட் லெவின் தெரிவித்துள்ளார்.

1956ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க அரசாங்கம் இலங்கையுடன் தொடர்புபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1960 - 1963ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களிலும் அமெரிக்கா தலையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, இடதுசாரி கட்சியுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக பேராசிரியர் லெவின் தெரிவித்துள்ளார்.

117 நாடுகளில் இடம்பெற்ற தேர்தல்கள் குறித்து பேராசிரியர் லெவின் விசாரணை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னணியில் இந்த தகவலை குறிப்பிட்டார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.