திட்டம் என்னவென்று புரிகிறதா மக்காள்..?

அலுத்கம பற்றி எறிந்தபோது முதலைக்கண்ணீர் வடித்த ராஜித சேனாரத்ன எங்கே.?
அன்று நியாயம்பேசியது எதற்காக?
உள்நோக்கத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்காக பேசுகின்றேன் என்று கூப்பாடு போட்ட ராஜித எங்கே.?

விளங்குதா மக்காள்...!

பொதுபலசேனா...
ராஜித...
மைத்திரி...
சம்பிக்க....
போன்ற இவர்கள்தான் சந்திரிக்காவின் தலைமையில் ஏற்கனவே மஹிந்தவை வீழ்த்த ஒன்றுபட்டவர்கள், அதனால்தான் டயஸ்போராக்களின் பணத்துக்கும், மேற்குலகின் திட்டத்துக்கும் ஏற்றாப்போல் காய் நகர்த்தியவர்கள் என்பது இப்போது புரிகிறதா....?

ஞானசாராவை நாய்க்கூண்டில் அடைப்பேன் என்ற சந்திரிக்கா எங்கே..?
நல்லாட்சி மலர்ந்தால் மதநல்லிணக்க சட்டம் கொண்டுவருவேன் என்ற மைத்திரி எங்கே..?
நான் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளை இறக்கமின்றி அடக்குவேன் என்ற ரணில் எங்கே..?
நல்லாட்சியை கொண்டுவருவதற்கு தொண்டை கிழிய கத்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே..?

இவர்கள் எல்லாம் மஹிந்தவை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்ட ஒற்றர்கள் என்பது இப்போது புரிகிறதா..?

இந்த ஞானசார இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் நெருப்போடு விளையாடுவதற்கு காரணம் தெறியுமா மக்காள்..?

மரிச்சிக்கட்டியை மறித்துக்கட்டிய விடயத்தையும், மாயக்கல்லில் சிலைவைத்தவிடயத்துக்கும் நீதி கேட்டு நிற்கும் முஸ்லிம்களின் என்னத்தை மாற்றுவதும், வடகிழக்கை இணைப்பதற்கு உதவி செய்வதுந்தான் திட்டமே...!
ஒரு கல்லில் இருமாங்காய்.....புரிகிறதா மக்காள்...?

திட்டம் தீட்டுவதில் இறைவன் மிகப்பெரியவன் புரிந்துகொள்ளுங்கள்..!

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.