என் இனிய உயிர் நபியே............!

என் உடலில் உயிர் இணைந்திருக்கும் காலமெல்லாம் இனிய நபி மீது புகழ் பாடும்
என் வழக்கம் நிலைத்திடுமே..............!

அருள் நபி மேல் நான் கொண்டிருக்கும் காதல்
என்னை அர்ஷுடைய நாயனின்
பால் நலமாய் சேர்த்திடுமே.........!

கருணை நபியின் குடும்பத்தின் மீது நான் கொண்ட ஈமான் என்னை சுவர்க்கம்
கொண்டு சென்றிடுமே.........!

அண்ணல் நபியின் திருமுகத்தை
வாழ்வில் ஒரு தடவை காண கிடைத்தால்
என் பாவங்கள் தொலைந்திடுமே..........!

ஜோதி நபியின் திருநாமம் நான் சொக்கி கூற
என் உள்ளம் ஜோதியாய் ஆகிடுமே...........!

சங்கை நபியின் புனித ரவ்லாவை
நான் தரிசித்தால் என் உள்ளம்
மதீனாவாக மாறிடுமே..........!

நாவினாலே ஸலவாத் ஓத
உள்ளத்தால் ஸலாமும் கூற
மாநபியின் ஷஃபாஅத்து கிடைத்திடுமே..........!

எண்ணிக்கை, எல்லைகள் எதுவுமின்றி
பெருகி வரும் என் கண்ணிய ஸலாமும்
நற் ஸலவாத்தும் புண்ணிய நபி மீது எந்நாளும் பொழிந்திடுமே.............!

என் கண்மணியே யா ரஸுலல்லாஹ்..............!

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.