சீறிப்பாய்ந்த ஜனாதிபதி முஸ்லிம் அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்,  முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்திக்க முயன்றுள்ளனர்.

இதுபற்றிய ஒரு செய்தியை கொழும்பிலிருந்த வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 22 ஆம் திகதி தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை பார்த்ததும் குறித்த பத்திரிகை மீது சீறிப் பாய்ந்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால.

இதுபோன்ற செய்திகள்  அவசியமற்றதெனவும் இவ்வாறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவமானது முஸ்லிம் சமூகப் பிரமுகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதியின் இனவாதமும், முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத வன்முறையை மூடிமறைக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் நரித்திந்திரமும் அம்பலமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.